வாழ்க்கைப் பயணத்தின் “அனுபவங்கள்” பாக்களாய்ப் பயணப்பட்டன வானலை
வளர்தமிழ்த் தேரில். எல்லாரும் ஒரே திசையினை நோக்கியேப் பயணப்பட்டது போல்
தோன்றினாலும் சில அபூர்வமான பயணங்களும் கண்டோம்.
01) காவிரி மைந்தன்:
தேடலே பயணம் என்று பாடலில்
தேடலைக் காட்டிய விதம் சிந்தனைக்கூடல்
பறவைகள் கூட திசையினைத் தீர்மானித்தே
இறக்கைகளை விரிக்கின்றன என்கின்றார்
இங்கு ஓர் அற்புதமான சிந்தனையை
உங்கட்கு நினைவூட்டுகின்றேன்
பறவை வானில் பயணிக்கும் பொழுது
பறவையை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும்;
வானைப் பற்றிய நினைவை நீக்கி விட வேண்டும்
என்று தன் மீதி ஓர் ஈர்ப்பை ஏறபடுத்தும்
பறவையின் பயணம்!
02) மதுக்கூர் சேட்:
குறுகிய அடிகட்குள்
கருவறை முதல்
கல்லறை வரை
பயணப்படுதலைப்
பயன்படுத்திய விதம் அருமை!
03) குறிஞ்சிதாசன்
இரை தேடும் பறவையாய்
இறக்கைக் கட்டிப் பயணித்தது முதல்
நித்திரை பயணம் வரை
முத்திரைச் சொற்களால்
முத்திரைப் பதித்தன இவரின் வரிகள்..
’சாதனையாளர்களின் பயணங்கள்
சாதாரண பயணங்கள் ஆகா”என்று
பட்டியலிட்ட பாங்கு ஆஹா ஆஹா
பட்டி தொட்டியெல்லாம் குறிஞ்சி மலராய் மணக்கும்!
04)
சி.என்.ரவீந்திரன்(மசாஃபி)
தேவையும் தேடலுமாய்
தேரிழுத்தார் பாடலிலே
வள்ளுவர் முதல் கண்ணதாசன் வரை
அள்ளுமழகு தமிழ்ப் பயணம் அடுக்கியுள்ளார்;
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை
நாற்றங்காலாக நற்றமிழில் விதைத்தக் க”விதை”!
மசாஃபி பாட்டில் நன்றாய் கவிநீர் இனித்தது!
05) அஃப்சல் பெய்க்:
பயணங்கள் சில தருணங்களில்
“பயம்” ஆகும் பயணங்களானதை
திக் திக் திகில் கவிதையாய்
பக் என உணரவைத்தார்
“ஏர் இந்தியா” விமான விபத்தை!
யார் இந்தக் கவிதையை படித்தாலும்
கண்ணிர்தான் பெருகும்
விண்ணில் பயணம்
விபத்தில்லாப் பயணமாக அமைக!
06)
அத்தாவுல்லாஹ்
வார்த்தைகளின் வானம்பாடி
கோர்த்திருக்கும் ஞானம்பாடி!
மெஞ்ஞான ஊற்றாக இவரின் பாடல்
அஞ்ஞானம் அறுக்கும் பயணத் தேடல்!
மனிதனின் தோற்றம் எனும் பயணமே
புனிதனாய் மாற்றும் என்பது நியாயமே!
07)
பல்கீஸ் சாகுல்:
ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரின் முகம் பார்க்கும் கண்ணாடி என்றொரு வரியை “முகம்” எனும் தலைப்பில் முகநூலில் அடியேன் ஒரு கவிதையில் வைத்தேன்; அதனை உணமைப்படுத்தும் விதமாக அன்புச் சகோதரி பல்கீஸ் சாகுல் எழுதிய புதுக்கவிதை , “பயணங்கள்” எனும் மரபுப்பாவில் அடியேன் எழுதிய கருத்துக்கள் ஒன்றாக அமைந்திருப்பதன் மூலம் அறிந்தேன்; வியந்தேன்; கவியுள்ளங்கள் என்றும் ஒரே சிந்தனையில் பயணப்படுபவர்கள் தான் என்பதை உலகம் ஒத்துக் கொண்ட உண்மையே! அன்புச் சகோதரி பல்கீஸ் சாகுல் பெண்மையின் மென்மையான குரலில் வாசிப்பதைப் போலவே அவர்களின் கவிதையின் சொற்களும் மென்மையாகவும் எவரையும் புண்படுத்தாமல்; ஆனால் பண்படுத்தும் நல்லுபதேசங்களாகவேக் காண்கிறேன். இவர்கட்கு இறைவன் வழங்கியுள்ள பேராற்றலால் கற்பனை வளங்களும் சொல்நயங்களும் அருவிகளாய்க் கொட்டுகின்றன; இவற்றை வகைப்படுத்தி “யாப்பு” எனும் வரப்புக்குள் இட்டு- இலக்கண வேலி போட்டால் ( கற்பனை+சொல்நயம்+இலக்கணம் சேர்ந்த) ஒரு கவிதைச் சோலை மலரும் என்பது என் கணிப்பு!. அதனாற்றான் அவர்கட்கு யாப்பிலக்கணம் கற்பிக்கலாம் என்று எண்ணுகின்றேன்.தனக்கும் என்னைப்போல் யாப்புக்கவி இயற்ற ஆவல் இருந்தும் அதன் விளக்கம் அறியாமல் இருப்பதாக என்னிடம் சொன்னதும் ,”கல்வியைத் தேடும் அவாவினைக் கண்டேன்”. இதே கருத்தை முன்னர் அன்புச் சகோதரி கவிதாயினி மலிக்காஃபாரூக் அவர்களிடமும் வைத்தேன்; எதிர்பாராதவிதமாக தாயகம் சென்று விட்டார்கள். இந்த அன்புச் சகோதரி மட்டும் இலக்கணம் ஒட்டிய இவர்களின் கற்பனைகள் கலந்த வடிவில் பாக்கள் வனைய முற்பட்டால் இவர்களை வெல்ல முடியாத சிகரத்தை எட்டி விடுவார்கள்; இஃது என் மாணவிக்கு என் ஆசிகளாகும்! “பூ” பற்றிய இவர்களின் கவிதையில் “கசக்கிய பிறகும் மணக்கும் ஒரு தியாகி” என்ற வரிகளைக் கேட்டு அழுதவர்களில் அடியேனும் ஒருவன். எத்துணை அழகான- ஆழமான சொல்லாடல்; இதுதான் கவிதை தேடல்!
“பயணங்கள்” பாடலில் “இறுதிப்பயணத்தின் இரகசிய நாள் தேடிக் காத்திருக்கும் முதுமைப் பயணம்” எனும் வரிகளில் மனதை நெருட வைத்தன; அடியேனும் முதுமை நோக்கிப் பயணிப்பதால் அன்புச் சகோதரியின் அறிவுரையாக ஏற்கிறேன்!
08)
கவிஞர் மு.பஷீர்
விடையறியா வினாக்களாகப்
பயணிக்கும் இவரின் பாடலில்
சிந்தனைக்கு நல்விருந்து கிடைக்கும்!
பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும்
பயணங்களின் பரிமாணங்கள்
பாடல் முழுவதும் பரவிக் கிடக்கும்!
09)
புதுவை கிறிஸ்டோபர்:
நடைபயணம் துவங்கி
பாடைபயணம் வரைக்கும்
வாகன பயணம் துவங்கி
வாழ்க்கை பயணம் வரைக்கும்
மனிதப் பயணங்களை வர்ணிக்கும்
இவரது வரிகளில்
இறைவனும் பயணிக்கின்றான்,
“அருள்மழை”எனும் ஆசி பயணம்
என்ற வரிகள் விவிலியத்தின்பால்
இவர் கொண்ட நேசம்- விசுவாசம்!
10)
காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்
வண்ணமாய்ப் பாடல் இயற்றும்
கண்ணதாசனின் காரைக்குடி எனும்
பதியில் பிறந்ததால் இவரும் கவிதை
நதியில் நன்றாகவே நீந்துகிறார்!
என் மரபுப்பாவின் முதல் வரியும்
இவரின் புதுக்கவிதையின் முதல்வரியும்
ஒரே எண்ணமுடன் எழுத்துக்களில்
எப்படித்தான் அமைந்தனவோ?
என்பாடல்:
“தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்
தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
முயற்சியால் வென்றதும் பயணம்”
அன்புச் சகோதரி ஃபாத்திமாவின் பாடல்:
“ஒருகோடி அணுக்களுடன்
உல்லாசமாய் தொடங்கி
உடன்வந்தோரை விட்டுவிட்டு
வெற்றிபெற்றது ஒருகருவின் பயணம்”
வியந்தேன்; இதுதான் கவியுள்ளம் என்று
புரிந்தேன்!
அறிவியல் பயணம்
அருளியல் பயணம்
அரசியல் பயணம்
செய்து சாதித்தோரின் பயணங்கள்
நெய்து காட்டியுள்ளார்
புதுக்கவிதை தறியில்
அற்புதமான சிந்தனைப் பொறியில்!
11)
அதிரை இளையசாகுல்
நான் பிறந்த அதிரை எனும் பதிக்குப் பெருமை சேர்க்கும் இளைய சாகுல் சிந்தனைச் சிற்பி என்று அழைக்கப் பெறும் அளவுக்கு புதுவெள்ளமாய்ப் பொங்கி வழிகின்றது இவரின் புதுக்கவிதை பயணங்கள்!
குரலின் வேகத்துக்கு இவரின் வரிகளா அல்லது இவரின்
வரிகட்கு இவரின் குரலா என்று தீர்ப்புச் சொல்லவியலாத அளவுக்கு வேகம் இவரின் வரிகளும்;குரலும்!
மனிதர்கள் துவங்கி, விலங்கினம் மற்றும் பறவைகளின் பயணங்களில் இவரின் சிந்தனையும் பயணப்பட்டு விட்டதால்
கவிதையும் நீண்டு விட்டதோ?
12)
“கவியன்பன்” கலாம்:
என்னைப்பற்றி நானை எப்படி விமர்சிப்பது?
ஆனாலும்.”பயணங்கள்” கவிதை.
உருவான கதை
இதன் விதை: மார்க்க ஞானம்
இப்பயணம் என்ற தலைப்பினைக் கேட்ட மாத்திரத்தில் “பூ”த் தலைப்பிலான கவியரங்கம் முடிந்து துபையிலிருந்து என் இருப்பிடம் அபுதபி நோக்கிப் பயணப்பட்ட போழ்து, பேருந்தின் இருக்கையில் அமர்ந்ததும் என் சிந்தையில் தட்டியப் பொறிகள் எழுசீர் விருத்தம் எனும் இலக்கண வர(ம்)ப்புக்குள் இனிதாய்ப் போய் இருக்கையிட்டுக் கொண்டன!
சிந்தனைப் பொறியிற் தட்டிய சீர் மிகு எழுசீர் விருத்தம் அழகிய ஓசை நயத்துடன் அமைந்த விருப்பத்துடன் என் கணிப்பொறியில் இடம்பிடித்தன; தமிழ்த்தேர்க்கு வடம்பிடித்தன; உடனே காவிரியார் அவர்கட்கு அனுப்பினேன்; அவர்களும் அதில் உள்ள வரிகளை வாசித்தார்கள்; நேசித்தார்கள். மேலும், அறிவிப்புச் செய்த உடன் வந்த முதற்கவிதை என்ற பேறும் பெற்றது!
இதன் சிறப்பு
1) என் மரபுப்பாக்களை என் ஆசான்கட்கு அனுப்பி இலக்கணப்பிழை / ஒற்றுப்பிழைகள் திருத்தம் வேண்டி அனுப்புவது என் கடமையான ஒரு பணியாக அடியேன் அமைத்துக் கொண்டதன்படி, இப்பாடலை என் ஆசான்கட்கு அனுப்பினேன். இப்பாடலில் “தொடையில் சாய்ந்து” என்ற வரிகட்குப் பகரமாக “மடியில் சாய்ந்து” என்று மாற்றி அமைத்து அடுத்த அரையடியில் “மகிழ்வுடன்..” என்று தொடங்கினால் “ம” எனும் மோனை ஒன்றி வரும் என்று மட்டும் ஒரு திருத்தம் மட்டுமே செய்து என் ஆசான் அதிரை அஹ்மத் காகா அவர்கள் தந்த தீர்ப்பு:
“ மிகச் சிறந்த கவிதை; அழகிய ஓசை நயம்” இப்படிப்பட்டப் பாராட்டை என் பாடல் பெற்றது எனக்குள் ஓர் அதிர்வு ஏற்பட்டது.
அடுத்த விநாடி காவிரியார் அவர்கள் அலைபேசியில் அழைத்து என்னை இந்தப் பயணங்கள் கவியரங்கின் தலைமைக் கவிஞனாகவும் அக்கவியரங்கில் கவிதை பாடும் 33 கவிஞர்களையும் அழைக்கும் பணியே வானலை வரலாற்றில் புதிய பாணியாக என் மரபுப்பாக்களின் பரணிகளாய் ஒலிக்கட்டும் என்று அன்புக் கட்டளையிட்டார்கள்; அடியேனும் பணிந்தேன்; அல்லாஹ்வும் அருள் பொழிந்தான்!
13)அப்துற் றஊஃப்:
அரசு பணியாளர் அப்துற் றஊஃப் அவர்கள் அபுதபியில் இருந்தாலும் இன்றுவரை நேரில் காணாவிடினும். அவர்க்ளின் ஆக்கங்கள் நாடோறும் என் கணினியின் கதவினைத் தட்டுகின்றன; எட்டுகின்றன!
ஆராய்ச்சியாளர்களின் பயணங்களில் இவரின் பயணப்பாட்டுப் பயணப்பட்டு நம்மை வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்கள் படித்த காலத்திற்குப் பயணிக்க வைத்தது!
இறுதி வரிகளில் இறைவனை நாடும் பயணமே இறுதிப் பயணமாய் அமைக என்ற வரிகள் “ஈமான்” எனும் நம்பிக்கைக்கு ஆதாரம்!
14)
குத்புதீன் ஐபக்:
அரசியலுக்குப் பொருத்தமான இவரின் அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் இவரின் பேச்சுக்களில் அடிக்கடிக் காணலாம்; ஆன்மீகம் இவருக்கு ஞான ஒளி; அதனாற்றான் வார்த்தைகள் கூட வானவெளி; ஆம். பரந்து விரிந்த பதவுரைகள்; பற்பல அறவுரைகள்!
பயணங்கள் பாட்டுக்கு இவரின் பாடுபொருளாக பண்பின் சிகரம் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் மார்க்கப் பயணம் குறித்த நிகழ்வுகளில், குறிப்பாக தாயிஃப் நகரத்து மக்களிடம் இந்த தாஹா நபி(ஸல்) அவர்கள் பட்ட தொல்லைகளைக் கண்ணீர் வரவழிய கவிதையாக்கியுள்ளார்!
15)
நர்கிஸ் ஜியா:
ஆசிரியையாகப் பணியாற்றும் இவர்களின் ஆற்றல் கவிதை உலகுக்குக் கிட்டிய அற்புதமான வரம்; அதனாற்றான் இவர்களின் வார்த்தைகளில் தரம்! அதுவும் உள்ளத்தில் இடம்பெறும் நிரந்தரம்!! உணர்வுகட்கு உண்மை ஊட்டும் உரம்!!
வாழக்கை பயணத்தை வரிசைப் படுத்தும் இவரின் வசீகர வார்த்தைகளின் வசமாகிவிட்ட இப்பாடலின் இறுதி வரிகள் நின்று, கவனித்து யோசிக்க வைக்கும்.
16)
ஜெயா பழனி:
வாழ்க்கையே ஒரு தேடல் எனும் பயணம் தான் என்பதை வார்த்தைகளால் கோர்த்திருக்கும் விதம் , அற்புதம்
ஒப்பீடுகளும், உவமைகளும் எப்படித்தான் இவரின் இந்தப் பயணப்பாட்டில் பயணப்பட்டு நம்மைச் சிந்தனைப் பயணத்திற்குச் சிறகடித்துப் பறக்க வைக்கின்றன!
17)
தஞ்சாவூரான்:
துவக்கக் காலத்தில் தூய மரபின் வழிநின்று யாப்புக் கடலில் கரைகண்ட இவரோ இன்று புதுநதியில் புதுவெள்ளமாய்ப் பொங்கும் அலைகட்குள் நீந்தி வருகின்றார்!
குறுஞ்செய்தி போல் உள்ள
குறும்பா கூறும் உண்மை
குறும்பாக எண்ண முடியாத அளவுக்கு
அரும்பாக அமைந்த வரிகள்:
“அயல்நாட்டுப் பயணம்:”
“அந்த கையசைப்பின் உள்ளர்த்தம்
கணவனுக்குத்தான் புரியவில்லை
கடவுளே உனக்குமா?”
கண்ணிரை வரவழைக்கும் எதார்த்தம்
ஒவ்வொரு முறையும் விடுப்புக் கழிந்து விமானம் ஏறி மீண்டும் அயல்நாடு வர பயண்க்கும் தருணம் விமானநிலையத்தில் வீசிவரும் இந்த கையசைப்புக்குள் இத்துணை ஆழமான- அழவைக்கும் அழகிய வரிகள் உள்ளபடியே உள்ளர்த்தம் ஓர் உள்ளத்தின் நெருடல்;வருடல்.
18)
ஆனிஷா பானு:
பயணத்திற்கிடையில் “கணினி”யும் பயணப்பட்டிருக்கின்றது இந்தக் கன்னித்தமிழில் கவிதையில்!
இத்தனைச் சிறிய வயதில் எத்துணை ஆழமான உணர்வுகள்!
தாயும் தந்தையும் தமிழின்பால் கொண்ட தாழாத அன்பால்
தானும் தமிழ்ப்பால் நிறையும் தமிழ்ப்பாத் தர முடியும் என்று
நிரூபித்த நிதர்சனம் கண்டு வியந்தேன்!
இறுதி வரிகள் இதயத்தைத் தொட்டன:
உதவும் கரங்களாய் கணினியை உவமையாக்கி நம்மை உவகைப் படுத்திய உள்ளமே உதவி தேடும் பாணி குழந்தையின் கெஞ்சல்; கணினிக்கு அனுப்பிய அஞ்சல்!
19)
ஜியாவுத்தீன்
பதிப்பிக்கும் பணியால் முத்தாய்ப்பான முத்திரை பதிக்கும் இவரின் பயணக்கவிதையும் ஒரு முத்திரையை முத்தாய்ப்பாகப் பதிப்பித்திருக்கின்றது: ஆம், “முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்” என்பதே இவரின் பணக்கவிதை போடும் விதை!
முன்னோர்கள் பயணித்த பாதை முட்பாதைகள் அல்ல; மலர்ப்பாதைகள்; அவைகளை மனம் ஏறக மறுத்தாலும், மறந்தாலும் அஃதே உண்மை!
பயணிக்கும் பாதைகளைப் பழுது பார்க்கச் சொல்லும் இவரின் வரிகளால், இவர் மிகவும் முன்னேற்பாடுள்ள முற்போக்குவாதியாகக் கணிக்கின்றேன்; வாழ்க! வளர்க!!
--
01) காவிரி மைந்தன்:
தேடலே பயணம் என்று பாடலில்
தேடலைக் காட்டிய விதம் சிந்தனைக்கூடல்
பறவைகள் கூட திசையினைத் தீர்மானித்தே
இறக்கைகளை விரிக்கின்றன என்கின்றார்
இங்கு ஓர் அற்புதமான சிந்தனையை
உங்கட்கு நினைவூட்டுகின்றேன்
பறவை வானில் பயணிக்கும் பொழுது
பறவையை மட்டுமே நாம் கவனிக்க வேண்டும்;
வானைப் பற்றிய நினைவை நீக்கி விட வேண்டும்
என்று தன் மீதி ஓர் ஈர்ப்பை ஏறபடுத்தும்
பறவையின் பயணம்!
02) மதுக்கூர் சேட்:
குறுகிய அடிகட்குள்
கருவறை முதல்
கல்லறை வரை
பயணப்படுதலைப்
பயன்படுத்திய விதம் அருமை!
03) குறிஞ்சிதாசன்
இரை தேடும் பறவையாய்
இறக்கைக் கட்டிப் பயணித்தது முதல்
நித்திரை பயணம் வரை
முத்திரைச் சொற்களால்
முத்திரைப் பதித்தன இவரின் வரிகள்..
’சாதனையாளர்களின் பயணங்கள்
சாதாரண பயணங்கள் ஆகா”என்று
பட்டியலிட்ட பாங்கு ஆஹா ஆஹா
பட்டி தொட்டியெல்லாம் குறிஞ்சி மலராய் மணக்கும்!
04)
சி.என்.ரவீந்திரன்(மசாஃபி)
தேவையும் தேடலுமாய்
தேரிழுத்தார் பாடலிலே
வள்ளுவர் முதல் கண்ணதாசன் வரை
அள்ளுமழகு தமிழ்ப் பயணம் அடுக்கியுள்ளார்;
மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை
நாற்றங்காலாக நற்றமிழில் விதைத்தக் க”விதை”!
மசாஃபி பாட்டில் நன்றாய் கவிநீர் இனித்தது!
05) அஃப்சல் பெய்க்:
பயணங்கள் சில தருணங்களில்
“பயம்” ஆகும் பயணங்களானதை
திக் திக் திகில் கவிதையாய்
பக் என உணரவைத்தார்
“ஏர் இந்தியா” விமான விபத்தை!
யார் இந்தக் கவிதையை படித்தாலும்
கண்ணிர்தான் பெருகும்
விண்ணில் பயணம்
விபத்தில்லாப் பயணமாக அமைக!
06)
அத்தாவுல்லாஹ்
வார்த்தைகளின் வானம்பாடி
கோர்த்திருக்கும் ஞானம்பாடி!
மெஞ்ஞான ஊற்றாக இவரின் பாடல்
அஞ்ஞானம் அறுக்கும் பயணத் தேடல்!
மனிதனின் தோற்றம் எனும் பயணமே
புனிதனாய் மாற்றும் என்பது நியாயமே!
07)
பல்கீஸ் சாகுல்:
ஒரு கவிஞர் மற்றொரு கவிஞரின் முகம் பார்க்கும் கண்ணாடி என்றொரு வரியை “முகம்” எனும் தலைப்பில் முகநூலில் அடியேன் ஒரு கவிதையில் வைத்தேன்; அதனை உணமைப்படுத்தும் விதமாக அன்புச் சகோதரி பல்கீஸ் சாகுல் எழுதிய புதுக்கவிதை , “பயணங்கள்” எனும் மரபுப்பாவில் அடியேன் எழுதிய கருத்துக்கள் ஒன்றாக அமைந்திருப்பதன் மூலம் அறிந்தேன்; வியந்தேன்; கவியுள்ளங்கள் என்றும் ஒரே சிந்தனையில் பயணப்படுபவர்கள் தான் என்பதை உலகம் ஒத்துக் கொண்ட உண்மையே! அன்புச் சகோதரி பல்கீஸ் சாகுல் பெண்மையின் மென்மையான குரலில் வாசிப்பதைப் போலவே அவர்களின் கவிதையின் சொற்களும் மென்மையாகவும் எவரையும் புண்படுத்தாமல்; ஆனால் பண்படுத்தும் நல்லுபதேசங்களாகவேக் காண்கிறேன். இவர்கட்கு இறைவன் வழங்கியுள்ள பேராற்றலால் கற்பனை வளங்களும் சொல்நயங்களும் அருவிகளாய்க் கொட்டுகின்றன; இவற்றை வகைப்படுத்தி “யாப்பு” எனும் வரப்புக்குள் இட்டு- இலக்கண வேலி போட்டால் ( கற்பனை+சொல்நயம்+இலக்கணம் சேர்ந்த) ஒரு கவிதைச் சோலை மலரும் என்பது என் கணிப்பு!. அதனாற்றான் அவர்கட்கு யாப்பிலக்கணம் கற்பிக்கலாம் என்று எண்ணுகின்றேன்.தனக்கும் என்னைப்போல் யாப்புக்கவி இயற்ற ஆவல் இருந்தும் அதன் விளக்கம் அறியாமல் இருப்பதாக என்னிடம் சொன்னதும் ,”கல்வியைத் தேடும் அவாவினைக் கண்டேன்”. இதே கருத்தை முன்னர் அன்புச் சகோதரி கவிதாயினி மலிக்காஃபாரூக் அவர்களிடமும் வைத்தேன்; எதிர்பாராதவிதமாக தாயகம் சென்று விட்டார்கள். இந்த அன்புச் சகோதரி மட்டும் இலக்கணம் ஒட்டிய இவர்களின் கற்பனைகள் கலந்த வடிவில் பாக்கள் வனைய முற்பட்டால் இவர்களை வெல்ல முடியாத சிகரத்தை எட்டி விடுவார்கள்; இஃது என் மாணவிக்கு என் ஆசிகளாகும்! “பூ” பற்றிய இவர்களின் கவிதையில் “கசக்கிய பிறகும் மணக்கும் ஒரு தியாகி” என்ற வரிகளைக் கேட்டு அழுதவர்களில் அடியேனும் ஒருவன். எத்துணை அழகான- ஆழமான சொல்லாடல்; இதுதான் கவிதை தேடல்!
“பயணங்கள்” பாடலில் “இறுதிப்பயணத்தின் இரகசிய நாள் தேடிக் காத்திருக்கும் முதுமைப் பயணம்” எனும் வரிகளில் மனதை நெருட வைத்தன; அடியேனும் முதுமை நோக்கிப் பயணிப்பதால் அன்புச் சகோதரியின் அறிவுரையாக ஏற்கிறேன்!
08)
கவிஞர் மு.பஷீர்
விடையறியா வினாக்களாகப்
பயணிக்கும் இவரின் பாடலில்
சிந்தனைக்கு நல்விருந்து கிடைக்கும்!
பிறப்பிலிருந்து இறப்பு வரைக்கும்
பயணங்களின் பரிமாணங்கள்
பாடல் முழுவதும் பரவிக் கிடக்கும்!
09)
புதுவை கிறிஸ்டோபர்:
நடைபயணம் துவங்கி
பாடைபயணம் வரைக்கும்
வாகன பயணம் துவங்கி
வாழ்க்கை பயணம் வரைக்கும்
மனிதப் பயணங்களை வர்ணிக்கும்
இவரது வரிகளில்
இறைவனும் பயணிக்கின்றான்,
“அருள்மழை”எனும் ஆசி பயணம்
என்ற வரிகள் விவிலியத்தின்பால்
இவர் கொண்ட நேசம்- விசுவாசம்!
10)
காரைக்குடி ஃபாத்திமா ஹமீத்
வண்ணமாய்ப் பாடல் இயற்றும்
கண்ணதாசனின் காரைக்குடி எனும்
பதியில் பிறந்ததால் இவரும் கவிதை
நதியில் நன்றாகவே நீந்துகிறார்!
என் மரபுப்பாவின் முதல் வரியும்
இவரின் புதுக்கவிதையின் முதல்வரியும்
ஒரே எண்ணமுடன் எழுத்துக்களில்
எப்படித்தான் அமைந்தனவோ?
என்பாடல்:
“தந்தையின் விந்தும் கருவறை நோக்கித்
தனிமையில் முதன்முதற் பயணம்
முந்தவும் பின்னே இறையருள் கொண்டு
முயற்சியால் வென்றதும் பயணம்”
அன்புச் சகோதரி ஃபாத்திமாவின் பாடல்:
“ஒருகோடி அணுக்களுடன்
உல்லாசமாய் தொடங்கி
உடன்வந்தோரை விட்டுவிட்டு
வெற்றிபெற்றது ஒருகருவின் பயணம்”
வியந்தேன்; இதுதான் கவியுள்ளம் என்று
புரிந்தேன்!
அறிவியல் பயணம்
அருளியல் பயணம்
அரசியல் பயணம்
செய்து சாதித்தோரின் பயணங்கள்
நெய்து காட்டியுள்ளார்
புதுக்கவிதை தறியில்
அற்புதமான சிந்தனைப் பொறியில்!
11)
அதிரை இளையசாகுல்
நான் பிறந்த அதிரை எனும் பதிக்குப் பெருமை சேர்க்கும் இளைய சாகுல் சிந்தனைச் சிற்பி என்று அழைக்கப் பெறும் அளவுக்கு புதுவெள்ளமாய்ப் பொங்கி வழிகின்றது இவரின் புதுக்கவிதை பயணங்கள்!
குரலின் வேகத்துக்கு இவரின் வரிகளா அல்லது இவரின்
வரிகட்கு இவரின் குரலா என்று தீர்ப்புச் சொல்லவியலாத அளவுக்கு வேகம் இவரின் வரிகளும்;குரலும்!
மனிதர்கள் துவங்கி, விலங்கினம் மற்றும் பறவைகளின் பயணங்களில் இவரின் சிந்தனையும் பயணப்பட்டு விட்டதால்
கவிதையும் நீண்டு விட்டதோ?
12)
“கவியன்பன்” கலாம்:
என்னைப்பற்றி நானை எப்படி விமர்சிப்பது?
ஆனாலும்.”பயணங்கள்” கவிதை.
உருவான கதை
இதன் விதை: மார்க்க ஞானம்
இப்பயணம் என்ற தலைப்பினைக் கேட்ட மாத்திரத்தில் “பூ”த் தலைப்பிலான கவியரங்கம் முடிந்து துபையிலிருந்து என் இருப்பிடம் அபுதபி நோக்கிப் பயணப்பட்ட போழ்து, பேருந்தின் இருக்கையில் அமர்ந்ததும் என் சிந்தையில் தட்டியப் பொறிகள் எழுசீர் விருத்தம் எனும் இலக்கண வர(ம்)ப்புக்குள் இனிதாய்ப் போய் இருக்கையிட்டுக் கொண்டன!
சிந்தனைப் பொறியிற் தட்டிய சீர் மிகு எழுசீர் விருத்தம் அழகிய ஓசை நயத்துடன் அமைந்த விருப்பத்துடன் என் கணிப்பொறியில் இடம்பிடித்தன; தமிழ்த்தேர்க்கு வடம்பிடித்தன; உடனே காவிரியார் அவர்கட்கு அனுப்பினேன்; அவர்களும் அதில் உள்ள வரிகளை வாசித்தார்கள்; நேசித்தார்கள். மேலும், அறிவிப்புச் செய்த உடன் வந்த முதற்கவிதை என்ற பேறும் பெற்றது!
இதன் சிறப்பு
1) என் மரபுப்பாக்களை என் ஆசான்கட்கு அனுப்பி இலக்கணப்பிழை / ஒற்றுப்பிழைகள் திருத்தம் வேண்டி அனுப்புவது என் கடமையான ஒரு பணியாக அடியேன் அமைத்துக் கொண்டதன்படி, இப்பாடலை என் ஆசான்கட்கு அனுப்பினேன். இப்பாடலில் “தொடையில் சாய்ந்து” என்ற வரிகட்குப் பகரமாக “மடியில் சாய்ந்து” என்று மாற்றி அமைத்து அடுத்த அரையடியில் “மகிழ்வுடன்..” என்று தொடங்கினால் “ம” எனும் மோனை ஒன்றி வரும் என்று மட்டும் ஒரு திருத்தம் மட்டுமே செய்து என் ஆசான் அதிரை அஹ்மத் காகா அவர்கள் தந்த தீர்ப்பு:
“ மிகச் சிறந்த கவிதை; அழகிய ஓசை நயம்” இப்படிப்பட்டப் பாராட்டை என் பாடல் பெற்றது எனக்குள் ஓர் அதிர்வு ஏற்பட்டது.
அடுத்த விநாடி காவிரியார் அவர்கள் அலைபேசியில் அழைத்து என்னை இந்தப் பயணங்கள் கவியரங்கின் தலைமைக் கவிஞனாகவும் அக்கவியரங்கில் கவிதை பாடும் 33 கவிஞர்களையும் அழைக்கும் பணியே வானலை வரலாற்றில் புதிய பாணியாக என் மரபுப்பாக்களின் பரணிகளாய் ஒலிக்கட்டும் என்று அன்புக் கட்டளையிட்டார்கள்; அடியேனும் பணிந்தேன்; அல்லாஹ்வும் அருள் பொழிந்தான்!
13)அப்துற் றஊஃப்:
அரசு பணியாளர் அப்துற் றஊஃப் அவர்கள் அபுதபியில் இருந்தாலும் இன்றுவரை நேரில் காணாவிடினும். அவர்க்ளின் ஆக்கங்கள் நாடோறும் என் கணினியின் கதவினைத் தட்டுகின்றன; எட்டுகின்றன!
ஆராய்ச்சியாளர்களின் பயணங்களில் இவரின் பயணப்பாட்டுப் பயணப்பட்டு நம்மை வரலாறு, புவியியல், அறிவியல் பாடங்கள் படித்த காலத்திற்குப் பயணிக்க வைத்தது!
இறுதி வரிகளில் இறைவனை நாடும் பயணமே இறுதிப் பயணமாய் அமைக என்ற வரிகள் “ஈமான்” எனும் நம்பிக்கைக்கு ஆதாரம்!
14)
குத்புதீன் ஐபக்:
அரசியலுக்குப் பொருத்தமான இவரின் அரசியல் பற்றிய ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் இவரின் பேச்சுக்களில் அடிக்கடிக் காணலாம்; ஆன்மீகம் இவருக்கு ஞான ஒளி; அதனாற்றான் வார்த்தைகள் கூட வானவெளி; ஆம். பரந்து விரிந்த பதவுரைகள்; பற்பல அறவுரைகள்!
பயணங்கள் பாட்டுக்கு இவரின் பாடுபொருளாக பண்பின் சிகரம் முஹம்மத் நபி(ஸல்) அவர்களின் மார்க்கப் பயணம் குறித்த நிகழ்வுகளில், குறிப்பாக தாயிஃப் நகரத்து மக்களிடம் இந்த தாஹா நபி(ஸல்) அவர்கள் பட்ட தொல்லைகளைக் கண்ணீர் வரவழிய கவிதையாக்கியுள்ளார்!
15)
நர்கிஸ் ஜியா:
ஆசிரியையாகப் பணியாற்றும் இவர்களின் ஆற்றல் கவிதை உலகுக்குக் கிட்டிய அற்புதமான வரம்; அதனாற்றான் இவர்களின் வார்த்தைகளில் தரம்! அதுவும் உள்ளத்தில் இடம்பெறும் நிரந்தரம்!! உணர்வுகட்கு உண்மை ஊட்டும் உரம்!!
வாழக்கை பயணத்தை வரிசைப் படுத்தும் இவரின் வசீகர வார்த்தைகளின் வசமாகிவிட்ட இப்பாடலின் இறுதி வரிகள் நின்று, கவனித்து யோசிக்க வைக்கும்.
16)
ஜெயா பழனி:
வாழ்க்கையே ஒரு தேடல் எனும் பயணம் தான் என்பதை வார்த்தைகளால் கோர்த்திருக்கும் விதம் , அற்புதம்
ஒப்பீடுகளும், உவமைகளும் எப்படித்தான் இவரின் இந்தப் பயணப்பாட்டில் பயணப்பட்டு நம்மைச் சிந்தனைப் பயணத்திற்குச் சிறகடித்துப் பறக்க வைக்கின்றன!
17)
தஞ்சாவூரான்:
துவக்கக் காலத்தில் தூய மரபின் வழிநின்று யாப்புக் கடலில் கரைகண்ட இவரோ இன்று புதுநதியில் புதுவெள்ளமாய்ப் பொங்கும் அலைகட்குள் நீந்தி வருகின்றார்!
குறுஞ்செய்தி போல் உள்ள
குறும்பா கூறும் உண்மை
குறும்பாக எண்ண முடியாத அளவுக்கு
அரும்பாக அமைந்த வரிகள்:
“அயல்நாட்டுப் பயணம்:”
“அந்த கையசைப்பின் உள்ளர்த்தம்
கணவனுக்குத்தான் புரியவில்லை
கடவுளே உனக்குமா?”
கண்ணிரை வரவழைக்கும் எதார்த்தம்
ஒவ்வொரு முறையும் விடுப்புக் கழிந்து விமானம் ஏறி மீண்டும் அயல்நாடு வர பயண்க்கும் தருணம் விமானநிலையத்தில் வீசிவரும் இந்த கையசைப்புக்குள் இத்துணை ஆழமான- அழவைக்கும் அழகிய வரிகள் உள்ளபடியே உள்ளர்த்தம் ஓர் உள்ளத்தின் நெருடல்;வருடல்.
18)
ஆனிஷா பானு:
பயணத்திற்கிடையில் “கணினி”யும் பயணப்பட்டிருக்கின்றது இந்தக் கன்னித்தமிழில் கவிதையில்!
இத்தனைச் சிறிய வயதில் எத்துணை ஆழமான உணர்வுகள்!
தாயும் தந்தையும் தமிழின்பால் கொண்ட தாழாத அன்பால்
தானும் தமிழ்ப்பால் நிறையும் தமிழ்ப்பாத் தர முடியும் என்று
நிரூபித்த நிதர்சனம் கண்டு வியந்தேன்!
இறுதி வரிகள் இதயத்தைத் தொட்டன:
உதவும் கரங்களாய் கணினியை உவமையாக்கி நம்மை உவகைப் படுத்திய உள்ளமே உதவி தேடும் பாணி குழந்தையின் கெஞ்சல்; கணினிக்கு அனுப்பிய அஞ்சல்!
19)
ஜியாவுத்தீன்
பதிப்பிக்கும் பணியால் முத்தாய்ப்பான முத்திரை பதிக்கும் இவரின் பயணக்கவிதையும் ஒரு முத்திரையை முத்தாய்ப்பாகப் பதிப்பித்திருக்கின்றது: ஆம், “முன்னோர்கள் முட்டாள்கள் அல்லர்” என்பதே இவரின் பணக்கவிதை போடும் விதை!
முன்னோர்கள் பயணித்த பாதை முட்பாதைகள் அல்ல; மலர்ப்பாதைகள்; அவைகளை மனம் ஏறக மறுத்தாலும், மறந்தாலும் அஃதே உண்மை!
பயணிக்கும் பாதைகளைப் பழுது பார்க்கச் சொல்லும் இவரின் வரிகளால், இவர் மிகவும் முன்னேற்பாடுள்ள முற்போக்குவாதியாகக் கணிக்கின்றேன்; வாழ்க! வளர்க!!
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்(பாடசாலை)
அபுதபி(தொழிற்சாலை)
என் வலைப்பூ கவிதைச்சோலை: http://www.kalaamkathir. blogspot.com
மின்னஞ்சல் முகவரி: kalamkader2@gmail.com
அலை பேசி: 00971-50-8351499 / 056-7822844
--


